கந்த சஷ்டி கவசம் (Kanda Sashti Kavacham) என்பது தேவராய சுவாமிகளால் முருகப் பெருமான் மீது இயற்றப்பட்ட பாடலாகும். ஆறுபடை வீடுகளுக்கும் தனித்தனியே கந்தர் சஷ்டி கவசம் பாடலை பாடியுள்ளார். அவற்றுள், திருச்செந்தூர் சஷ்டி கவசமே மிகவும் பிரபலம். இந்தப் பாடல் மொத்தம் 244 வரிகளைக் கொண்டுள்ளது. காக்க என்று முருகனை வேண்டி கொள்ளும் இந்த இனிய பாமாலை கந்த சஷ்டி கவசம் என்று அறிய படுகிறது
வேல் மாறல் என்பது முருகப்பெருமானின் வேல் வகுப்பு மந்திரத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு பக்திப் பாடலாகும். அருணகிரிநாதர் அருளிய வேல் வகுப்பின் 16 அடிகளை, முன்னும் பின்னும், மேலும் கீழுமாக மாற்றி, நான்கு மடங்காக (64 அடிகள்) தொகுத்து வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள் வழங்கியுள்ளார். இது ஒரு சக்தி வாய்ந்த மந்திரமாகக் கருதப்படுகிறது. இந்த மந்திரத்தை பாராயணம் செய்வதன் மூலம் வினைகள் நீங்கும், தோஷங்கள் நீங்கும், துன்பங்கள் விலகும் என்பது நம்பிக்கை, கலியுகத்தில் கவசமாக அமையும், நோய் நீங்கும்.
We provide online training sessions for learning Kandha Sashti Kavacham & Velmaaral.